
கீழ்பென்னாத்தூர் சட்டசபை தொகுதியில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி கீழ்பென்னாத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் பிரசன்னா தலைமையில் மாணவர்கள் தேர்தல் ஆணைய குறியீடு வடிவில் அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதில் கீழ்பென்னாத்தூர் சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார், உதவித்தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இராஜேந்திரன் உட்பட பள்ளி ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.